தனது தமிழ் புது வருட வாழ்த்துக்களை தாய் நிலத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் வளலாய் உறவுகளுக்கு தெரிவிப்பதுடன் வரும் ஜய வருடம் எல்லோருக்கும் எல்லாக் கருமங்களிலும் ஜயம் அளிக்க எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையார் துணை நிற்க அவர் அருளை நாடுவோம். |
தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங்கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படு கின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமை க்கான வரலாறுகளைக் கொண்டது எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராமநிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன. மேலும் படிக்க...
தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்பு க்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக்கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள். மேலும் படிக்க...
இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபிரனரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்ப தோடு, பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் படிக்க... தன்னார்வல மக்கள் குழுக்கள்...கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்
தலைவர் : கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி B.Sc. அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்
தலைவர் - சண்முகநாதன் ஞானரூபன் வளலாய் பெரிய நாகதம்பிரான் கோவில் அறங்காலர் சபை உறுப்பினர்கள்
தலைவர் : செல்லப்பு ராசரத்தினம் வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்
தலைவர் : செ. துரைரத்தினம் சமாதன நீதவான் |
|||||||||

.jpg)